Last Updated : 16 Oct, 2015 08:09 AM

 

Published : 16 Oct 2015 08:09 AM
Last Updated : 16 Oct 2015 08:09 AM

பணி நியமன ஊழல் வழக்கில் திக்விஜய் சிங்கிடம் விசாரணை

காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், மத்தியப்பிரதேச முதல்வ ராக இருந்தபோது, தலைமைச் செயலக ஊழியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

1993-2003 காலகட்டத்தில் மத்தியப் பிரதேச முதல்வராக திக்விஜய் சிங் பதவி வகித்தார். அப்போது தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்ற தாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக, ஜஹாங்கிராபாத் காவல் துறை கண் காணிப்பாளர் சலீம் கான் முன்பு நேற்று ஆஜரானார்.

அவர் முதல்வராக இருந்த 10 ஆண்டு களில் தலைமைச் செயலகத்தில் நடை பெற்ற அனைத்துப் பணி நியமனங்கள் குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது. சுமார் 250 கேள்விகள் அவரிடம் கேட்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 5 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x