Published : 20 Oct 2020 07:56 AM
Last Updated : 20 Oct 2020 07:56 AM
மகாராஷ்டிராவில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களுக்காக அவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வட்டித் தொகையை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள், கடந்த 2015 முதல் 2019-ம் ஆண்டு மார்ச்வரையில் பெற்றிருந்த பயிர்க்கடன்களை அம்மாநில அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்தள்ளுபடி செய்தது. இருந்தாலும் அந்தக் கடனுக்கான வட்டியை செலுத்தினால் மட்டுமே, நடப்பாண்டில் பயிர்க்கடன் வழங்கப்படும் என அங்குள்ள வங்கிகள் நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமர்வில் அண்மையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT