Last Updated : 09 Sep, 2015 09:03 AM

 

Published : 09 Sep 2015 09:03 AM
Last Updated : 09 Sep 2015 09:03 AM

இஸ்ரோவுக்கு காந்தி அமைதி விருது

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு (இஸ்ரோ) 2014-ம் ஆண்டின் காந்தி அமைதி விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் வழங்கவுள்ளார்.

மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த நாளையொட்டி மத்திய அரசால் 1995-ம் ஆண்டு காந்தி அமைதி விருது ஏற்படுத்தப் பட்டது.

அஹிம்சை மற்றும் பிற காந்திய வழிகளில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு அடிகோலும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை பாராட்டி இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

2013-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது, காந்தி வழி சுற்றுச்சூழல் அறிஞரும், சமூக செயற்பாட்டாளருமான சண்டி பிரசாத் பட்-டுக்கு வழங்கப்பட்டது. இவர் 1964-ல் தசோலி கிராம ஸ்வ ராஜ்ய சங்கம் என்ற அமைப்பை தோற்றுவித்தார். இந்த அமைப் பில் இருந்து சிப்கோ இயக்கம் உருவானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x