Published : 28 Sep 2015 11:48 AM
Last Updated : 28 Sep 2015 11:48 AM
அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரஞ்சு அதிபர் ஹாலண்டே, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள்கிழமை) சந்தித்து ஆலோசிக்கிறார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாட்டுத் தலைவர்களை பிரதமர் மோடி சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இவர்களைத் தவிர கத்தார் நாட்டு அதிபர் ஹமத் பின் காலிஃபா அல் தானி, மெக்சிகோ அதிபர் என்ரிக் பீனா நீட்டோ, பாலஸ்தீன் அதிபர் மகமுது அப்பாஸ் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்திப்பார் என வெளியுறவு செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் அளிக்கும் விருந்து நிகழ்ச்சியிலும் மோடி பங்கேற்கிறார்.
முன்னதாக நேற்று அவர் சிலிகான் வேலி சென்றார். கடந்த முப்பது ஆண்டுகளில் சிலிகான்வேலிக்கு வருகை தந்த முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அவர் அங்கு ஆப்பிள், ஃபேஸ்புக், கூகுள், டெஸ்லா போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT