Published : 02 Oct 2020 11:53 AM
Last Updated : 02 Oct 2020 11:53 AM

குவைத் மன்னர் மறைவு; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

புதுடெல்லி

குவைத் மன்னர் ஷேக் சபாஹ் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபாஹ்வின் மறைவையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 4-ம் தேதி ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

குவைத் மன்னர் ஷேக் சபாஹ் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபாஹ் 2020 செப்டம்பர் 29 அன்று மறைந்தார். மறைந்த அரசருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 2020 அக்டோபர் 4 அன்று ஒரு நாள் துக்கத்தை நாடு முழுவதும் அனுஷ்டிக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.

தேசிய கொடி வழக்கமாக பறக்கும் நாடு முழுவதுமுள்ள அனைத்து கட்டிடங்களிலும் அன்று அது அரை கம்பத்தில் பறக்கும். அன்றைய தினம் எந்த அரசு நிகழ்ச்சியும் நடைபெறாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x