Published : 15 Sep 2015 11:40 AM
Last Updated : 15 Sep 2015 11:40 AM

டெல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு குழந்தை பலி

டெல்லியில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு குழந்தை பலியானது. இத்துடன் டெல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து தி இந்துவுக்கு பலியான சிறுவனின் தந்தை மனோஜ் சர்மா கூறும்போது, "எனது குழந்தைக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவனை சப்தர்ஜிங் மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கிருந்து வேறு தனியார் மருத்துவமனையில் சேர்க்க முயன்றோம்.

கடைசியாக ஒரு தனியார் நர்சிங் ஹோமில் கடந்த சனிக்கிழமை இரவு அனுமதித்தோம். ஆனால், சிறிது நேரத்திலேயே அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாகக் கூறி டிஸ்சார்ஜ் செய்தனர். பின்னர் பத்ரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால், குழந்தை இறந்துவிட்டான்" என்றார்.

டெல்லியில் இதுவரை 1,714 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2010-ல் இதே காலகட்டத்தில் டெல்லியில் 1,695 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதே மிகவும் அதிகமானதாகக் கருதப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x