Last Updated : 05 Sep, 2015 09:23 AM

 

Published : 05 Sep 2015 09:23 AM
Last Updated : 05 Sep 2015 09:23 AM

முப்தி அரசு என்னை உளவு பார்க்கிறது: ஒமர் அப்துல்லா குற்றச்சாட்டு

காஷ்மீரில் முப்தி முகம்மது சயீது தலையிலான அரசு தன்னை உளவு பார்க்கிறது என்று முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஒமர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “முப்தி அரசு அசாத்திய துணிச்சலுடன் என்னை உளவு பார்க்கிறது. தேசிய நாளேடு ஒன்றுக்காக என்னை பேட்டி எடுத்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை, எனது வீட்டு வெளிக் கதவுக்கு அருகிலேயே சிஐடி அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார். அந்தப் பத்திரிகையாளரிடம், ‘நீங்கள் யார்? உங்கள் வருகையின் நோக்கம் என்ன?’ என்றெல்லாம் விசாரித் துள்ளனர். அரசுக்கு தகவல் வேண்டு மானால் என்னிடமே கேட்டிருக்க லாம். முதல்வர் முப்தி என்னிடம் தொலைபேசியில் கேட்டிருந்தால் நானே கூறியிருப்பேன். என்னை சந்திப்பவர்களை தயவுசெய்து எனது வீட்டுக்கு வெளியே விசாரிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்தக் குற்றசாட்டை ஆளும் கூட்டணியை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி மறுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வஹீதுர் ரஹ்மான் கூறும்போது, “குறிப்பிட்ட பெண் பத்திரிகையாளரிடம் விசாரித்தது சிஐடி அதிகாரி அல்ல. ஒமர் வீட்டுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட அவரது கட்சித் தொண்டரே விசாரித்துள்ளார். ஒமர் என்ன செய்கிறார் என யோசித்து ஒரு வினாடி கூட வீணடிக்க எங்கள் அரசு விரும்பவில்லை. செய்திகளில் இடம் பிடிப்பதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ஒமர் கூறுகிறார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x