Published : 13 Sep 2020 01:01 PM
Last Updated : 13 Sep 2020 01:01 PM

கரோனா தொற்று; இந்தியாவில்  நாளொன்றுக்கு 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைகின்றனர்

இந்தியாவில் தொடர்ந்து ஒரு நாளைக்கு 70 ஆயிரத்துக்கும் அதிகமாக கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருகின்றனர்.

கவனமான, ஒன்றிணைந்த, துரிதமான மற்றும் திறன் வாய்ந்த நடவடிக்கைகளின் மூலம் அதிக அளவிலான பரிசோதனைகள், சிறப்பான கண்காணிப்பு மற்றும் உயர்தர மருத்துவ சிகிச்சை மூலம் இது சாத்தியமாகி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 78,399 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் மொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்து 37,02,595ஐ தொட்டுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 77.88 சதவீதமாக உள்ளது.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள், நாட்டின் 58 சதவீத குணமடைதல்களுக்கு காரணமாக உள்ளன.

மகாராஷ்டிராவில் மட்டும் ஒரே நாளில் சுமார் 13 ஆயிரம் பேர் குணமடைந்துள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x