Published : 08 Sep 2020 03:04 PM
Last Updated : 08 Sep 2020 03:04 PM

மலேரியா கட்டுப்பாட்டு திட்டம்; ஜாம்பியாவுக்கு 114.2 மெட்ரிக் டன்கள் மருந்து அனுப்பியது இந்தியா

புதுடெல்லி

மலேரியா கட்டுப்பாட்டு திட்டத்திற்காக 114.2 மெட்ரிக் டன்கள் டிடிட்டி-ஐ (DDT) எச் ஐ எல் (இந்தியா) லிமிடெட் ஜாம்பியாவுக்கு அனுப்பியது

ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனமான எச் ஐ எல் (இந்தியா) லிமிடெட், 114.2 மெட்ரிக் டன்கள் டிடிட்டி-ஐ (DDT), மலேரியா கட்டுப்பாட்டு திட்டத்திற்காக ஜாம்பியாவுக்கு அனுப்பியுள்ளது.

ஜாம்பிய சுகாதார அமைச்சகத்திடம் இருந்து பெற்ற 307 மெட்ரிக் டன்களுக்கான விநியோக உத்தரவின் படி அனுப்பப்படும் சரக்குகளில் இது கடைசிப் பகுதியாகும் என்று எச் ஐ எல் (இந்தியா) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு எஸ் பி மொகந்தி கூறினார்.

டிடிட்டி-ஐ சர்வதேச அளவில் உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனம் எச் ஐ எல் (இந்தியா) ஆகும். மலேரியா கட்டுப்பாட்டு திட்டத்திற்காக இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு டிடிட்டி-ஐ தயாரித்து விநியோகிக்க 1954-ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

2019-20-இல், நாட்டில் உள்ள 20 மாநிலங்களுக்கு இந்தப் பொருள் விநியோகிக்கப்பட்டது. பல ஆப்பிரிக்க நாடுகளுக்கும் டிடிட்டி-ஐ எச் ஐ எல் (இந்தியா) லிமிடெட் ஏற்றுமதி செய்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x