Published : 08 Sep 2015 08:06 AM
Last Updated : 08 Sep 2015 08:06 AM
பெங்களூருவில் நேற்று முன் தினம் இரவு பெய்த கனமழைக்கு வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 5 கட்டிடத் தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர்.
பெங்களூரு ஹெக்டே நகர் அருகே 'சிக்னேச்சர் கன்ஸ்ட்ரக்சன்' என்ற கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி வருகிறது. இதில் வேலை செய்யும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசிப்பதற்காக கட்டிடத்தின் அருகே மண் சுவர், இரும்பு கூரையால் ஆன தற்காலிக வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி பலத்த காற்றுடன் விடிய விடிய கனமழை பெய்தது. அதிகாலை 4 மணி அளவில் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்ததில், உறங்கிக் கொண்டிருந்த 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடு களுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இவ்விபத்தில் 5 பேர் உயிரிழந் தனர். காயமடைந்த 27 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவன உரிமையாளர், பொறியாளர், திட்டபொறியாளர், மேற்பார்வை பொறியாளர் மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பாளர் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT