Published : 31 Aug 2020 10:08 PM
Last Updated : 31 Aug 2020 10:08 PM

‘‘தாய்நாட்டிற்கு அழியாத பங்களிப்பு வழங்கிய பிரணாப் முகர்ஜி’’- அமித் ஷா நெகிழ்ச்சி

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “பிரணாப் முகர்ஜி காலமானதில் மிகுந்த வேதனையடைந்துள்ளேன். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த தலைவராக இருந்தார், அவர் மிகுந்த பக்தியுடன் தேசத்திற்கு சேவை செய்தார். பிரணாப் முகர்ஜியின் சிறந்த வாழ்க்கை முழு நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விஷயம்.

பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை அவரது கறைபடியாத சேவைக்காகவும், நம் தாய்நாட்டிற்கு அளித்த அழியாத பங்களிப்புக்காகவும் எப்போதும் மதிக்கப்படும். அவரது மறைவு இந்திய அரசியலில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈடுசெய்ய முடியாத இந்த இழப்புக்காக, அவரது குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x