Published : 14 Sep 2015 10:26 AM
Last Updated : 14 Sep 2015 10:26 AM
சட்டவிரோத பணப்பரிமாற்றம், தீவிரவாத அமைப்புகளுக்கான நிதியுதவி மற்றும் இது தொடர் பான அச்சுறுத்தல்களை எதிர் கொள்வதற்கான திட்டங்களை வகுப்பதற்காக ஜி7 நாடுகள் அமைப் பின் முயற்சியால் நிதி செயல் பணிக் குழு (எப்ஏடிஎப்) அமைக்கப்பட்டது.
இந்த நாடுகளுக்கிடையே தக வல்களை பரிமாறிக்கொள்வதற் காக அமைக்கப்பட்ட இந்த அமைப் பின் பரிந்துரையின் அடிப்படையில், தீவிரவாத அச்சுறுத்தல், வங்கி, காப்பீடு, பங்குச் சந்தை மற்றும் நிதி நிறுவனங்களில் தீவிரவாத அமைப்புகளால் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது.
இந்தக் குழு கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி மாநில அரசுகளுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘தீவிரவாத அச்சுறுத்தல்’, ‘தீவிரவாத நிதி அச்சுறுத்தல்’ மற்றும் ‘தீவிரவாத நிதி தாக்கம்’ ஆகிய 3 விதமான மாதிரி படிவங்களை அனுப்பி, அதைப் பூர்த்தி செய்து 30-ம் தேதிக்குள் அனுப்புமாறு கோரப்பட்டிருந்தது.
உதாரணமாக, ‘தீவிரவாத அச்சுறுத்தல்’ என்ற தலைப் பிலான படிவத்தில், தீவிர வாதம் தொடர்பாக பதிவாகி உள்ள அல்லது விசாரிக்கப்பட்ட வழக்கு கள் எண்ணிக்கை, குற்றம்சாட்டப் பட்டவர்கள் எண்ணிக்கை, சர்வதேச உதவி தேவைப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை, சொத்து சேத விவரம் உள்ளிட்ட விவரங்களும் கோரப்பட்டிருந்தன.
ஆனால் இதுவரை எந்த ஒரு மாநில அரசிடமிருந்தும் பதில் வர வில்லை என்று மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT