Published : 27 Jul 2020 08:10 AM
Last Updated : 27 Jul 2020 08:10 AM
திருப்பதியில் 101 வயது மூதாட்டி ஒருவர் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் பலர் அச்சமும் மன உளைச்சலும் அடைவது வழக்கமாக உள்ளது. ஆனால் திருப்பதியை சேர்ந்த மங்கம்மா என்ற 101 வயது மூதாட்டி, கரோனா தொற்றை தைரியமாக எதிர்கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெற்றிகரமாக வீடு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து திருப்பதி ஸ்விம்ஸ் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ராம் நேற்று கூறும்போது, “மங்கம்மா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் இங்கு அனுமதிக்கப்பட்டார். 101 வயதிலும் அவர் தினமும் உடற்பயிற்சியும் மூச்சுப் பயிற்சியும் செய்வது உட்பட கிசிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். ஆச்சரியப்படும் வகையில் இவர் விரைவில் குணமடைந்தார். அவரை சனிக்கிழமை மாலை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். கரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றவர்களும் அந்த மூதாட்டியை போல நோயை மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும்” என்றார். மூதாட்டி மங்கம்மா நேற்று முன்தினம் வீடு திரும்பும் முன், டாக்டர் ராம் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் வார்டு உதவியாளர்கள் அவரின் காலை தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT