Last Updated : 25 Sep, 2015 09:41 AM

 

Published : 25 Sep 2015 09:41 AM
Last Updated : 25 Sep 2015 09:41 AM

அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு: அக். 7-ல் முடிவு

முறைகேடு வழக்கில் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வது குறித்து அக்டோபர் 7-ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று டெல்லி நீதிமன்றம் தெரி வித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி பணி யாற்றியபோது, உத்தரப் பிரதேசம் பரேலியில் உள்ள மருத்துவக் கல்லூரி, மத்தியப் பிரதேசம் இந்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

பரேலி மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கு உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு கடந்த ஆண்டு டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இதன்பின்னர் முறைகேடு தொடர்பான இரு வழக்குகளின் விசாரணையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகள் நீதிபதி அஜய் குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் வழக்கை அக். 7-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அன்றைய தினம் அன்புமணி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வது குறித்து முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x