Published : 14 Jun 2020 09:12 AM
Last Updated : 14 Jun 2020 09:12 AM
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 8வது நாளாக உயர்த்தியுள்ளன.
இதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 54 காசுகள் விலை உயர்ந்து ரூ.79.53க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 54 காசுகள் விலை உயர்ந்து ரூ.72.18க்கு விற்பனையாகிறது.
தொடர்ந்து சராசரியாக 60 காசுகள் என்ற அடிப்படையில் உயர்த்தப்படும் இந்த விலை உயர்வால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் நேற்று மத்திய அரசின் இந்தப் போக்கை ஆதாரங்களுடன் கண்டித்தார். “சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து, கடந்த 15ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. ஆனால்,இ்ங்கு பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் உயர்த்தி விண்ணை முட்டும் அளவு அதிரிக்கிறது. மோடியின் அரசு சமானிய மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள்
பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலன்களை மக்களுக்கும், நுகர்வோருக்கும் வழங்காமல் தொடர்ந்து 7-வதுநாளாக விலைஉயர்த்தப்பட்டுள்ளது
கடந்த 6 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலைஉயர்வால் மத்திய அரசுக்கு ரூ.44 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது, கடந்த மார்ச் 5-ம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் ரூ.2.50 லட்சம் கோடி மத்தியஅரசுக்குக் கிடைத்துள்ளது
சமானிய மக்களின் உணர்வுகள், நிலையைப் பற்றி சிறிதுகூட மத்திய அரசு உணர்ந்திருந்தால், எண்ணெய் நிறுவனங்களுக்கு உதவுவதற்கு பதிலாக, பிரதமர் மோடி, சாமானியர்களுக்கு உதவும் வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருப்பார்” என்று கடுமையாகச் சாடினார்.
இந்நிலையில் பெட்ரோல் விலை 8வது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் படி தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை 52 காசுகல் உயர்ந்து லிட்டர் ரூ.75.78 ஆக உள்ளது.
கொல்கத்தாவில் ரூ.77.05 ஆக இருந்த பெட்ரோல் விலை ரூ.77.64 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் 60 காசுகள் அதிகரித்து ரூ.82.70 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ரூ.78.99 லிருந்து ரூ.79.53 ஆக அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் ரூ.76.68 லிருந்து ரூ.77.62 ஆக அதிகரித்துள்ளது.
ஹைதராபாத்தில் ரூ.78.03லிருந்து 78.67 ஆக அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT