Published : 29 May 2020 07:19 AM
Last Updated : 29 May 2020 07:19 AM
கரோனா வைரஸுக்கு இந்தியா விரைவில் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகளில் பல உலக நாடுகள் இறங்கியுள்ளன. அதேபோல, இந்தியாவும் தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நமது நாட்டின் மருந்து ஆராய்ச்சித் துறை அதிக அளவிலான திறமைசாலிகளை கொண்டிருக்கிறது. எனவே, கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை இந்தியா விரைவில் கண்டுபிடிக்கும். அதன் மூலம் கரோனா வைரஸை நாம் வெற்றிக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT