Published : 26 May 2020 10:04 PM
Last Updated : 26 May 2020 10:04 PM
அடுத்த 24 மணி நேரத்தில் கடல் மற்றும் அருகிலுள்ள மத்திய வங்காள விரிகுடா பகுதிகளில் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கத்திய காற்று மாறுதல் மற்றும் கிழக்கு-மேற்கு காற்று இடைநிறுத்தம் குறைந்த மட்டத்தில் உருவாகி, மே 28 முதல் 29 வரை மழை, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், வட இந்தியாவின் சமவெளிகளில் அதிகபட்ச வெப்பநிலை 28 ஆம் தேதி முதல் அனல் காற்று கணிசமாகக் குறைய தொடங்கி மே 29 முதல் வெப்ப நிலையும் படிப்படியாக குறைய தொடங்கும்.
இந்தியாவின் மத்திய பகுதி மற்றும் அருகிலுள்ள கிழக்குப் பகுதிகளில் சாதகமான காற்று நிலைமைகளின் காரணமாக, வெப்ப அலை நிலைகளும், அனல் காற்றும் மே 29 முதல் இந்த பகுதிகளில் குறைய வாய்ப்புள்ளது.
வங்காள விரிகுடாவிலிருந்து வடகிழக்கு இந்தியா வரை குறைந்த வெப்பமண்டல மட்டத்தில் உருவாகும் வலுவான தென்கிழக்கு காற்று காரணமாக; அடுத்த 5 நாட்களில் அசாம் மற்றும் மேகாலயாவின் சில பகுதிகளிலும், 26 ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் மிக அதிக மழை பெய்யக்கூடும்.
அடுத்த 5 நாட்களில் நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களின் ஒரு சில பகுதிகளிலும், அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு இந்தியாவின் அருகிலுள்ள பகுதிகளிலும் அதிக மழை பெய்யக்கூடும். மே 26, 2020 முதல் 30 வரை தெற்கு தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும்.
தென்மேற்கு பருவமழை தெற்கு வங்காள விரிகுடா, அந்தமானின் இன்னும் சில பகுதிகளுக்கு முன்னேற சாதகமான வானிலை நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் கடல் மற்றும் அருகிலுள்ள மத்திய வங்காள விரிகுடா பகுதிகளில் பெய்ய வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT