Published : 12 Aug 2015 09:43 AM
Last Updated : 12 Aug 2015 09:43 AM
சுசுதந்திர தினத்தை புறக்கணிக்க பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து நான்கு வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
‘நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில்-கப்லங்', ‘அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி', ‘போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி' மற்றும் ‘கம்தாபூர் விடுதலை அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக் குழு' ஆகிய நான்கு பிரிவினைவாத அமைப்புகள் கூட்டாக இணைந்து ஓர் அறிவிப்பை வெளியிட் டுள்ளன.
அதன்படி, சுதந்திர தினத்தன்று நள்ளிரவு 12 மணி முதல் மாலை 6 மணி வரை பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. மேலும் சுதந்திர தின விழாவைப் புறக்கணிக்கவும் வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து மத்திய உள் துறைப் பாதுகாப்பு அமைச்சகத் தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க பிரிவினை வாத அமைப்புகள் திட்டமிட்டுள் ளன என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எனவே, மணிப்பூர், நாகாலாந்து, அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய நான்கு வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட் டுள்ளன. குறிப்பாக மணிப்பூரில், எந்த ஓர் அசம்பாவிதமும் நிகழாதவாறு ஆயிரக்கணக்கான ராணுவத்தினர், போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT