Published : 25 Apr 2020 01:32 PM
Last Updated : 25 Apr 2020 01:32 PM

கரோனா; ஜூன் 30-ம் தேதி வரை பொது நிகழ்ச்சிகள் ரத்து: உ.பி. அரசு அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் வரும் ஜூன் 30-ம் தேதி வரை பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் வரும் ஜூன் 30-ம் தேதி வரை பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் ‘‘உத்தர பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஜூன் 30-ம் தேதி வரை பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை. அதற்கு பிறகும் கூட நிலைமையை கவனத்தில் கொண்ட அனுமதி அளிக்கப்படும். அனைத்து விதமான பொது நிகழ்ச்சிகள் முழுமையாக ரத்து செய்யப்படும். யாரும் இதுதொடர்பாக எந்த ஏற்பாடுகளையும் செய்ய வேண்டாம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x