Published : 17 Apr 2020 07:42 PM
Last Updated : 17 Apr 2020 07:42 PM

சந்தைகளில் மக்கள் கூடினால் ஊரடங்கு விதிகள் கடுமையாகும்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை

சந்தைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை நான் பார்க்கக் கூடாது, அவ்வாறு தெரிந்தால் ஊரடங்கு உத்தரவு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேற்குவங்கத்திலும் சில நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:
மேற்குவங்கத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. ஊரடங்கு நடவடிக்கையை கடுமையாக்கா விட்டால் சமூக பரவல் ஏற்படும் ஆபத்து உள்ளது.

எனவே அதற்கு நாம் வாய்ப்பு கொடுக்கக் கூடாது. சந்தைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை நான் பார்க்கக் கூடாது. அவ்வாறு தெரிந்தால் ஊரடங்கு உத்தரவு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும். ஆயுதம் தாங்கிய போலீஸார் சந்தைகளில் நிறுத்தப்படுவர். அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x