Published : 14 Apr 2020 01:52 PM
Last Updated : 14 Apr 2020 01:52 PM

மே 3-ம் தேதி வரை விமானப் போக்குவரத்தும் முழுமையாக ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

மே 3-ம் தேதி வரை அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் மே- 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். இதனால் போக்குவரத்து செயல்பட தொடர்ந்து தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ரயில் போக்குவரத்து மே 3-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மே 3-ம் தேதி வரை அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. மே 3-ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை பயணிகள் விமானங்கள் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுவதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x