Last Updated : 12 Apr, 2020 10:20 AM

 

Published : 12 Apr 2020 10:20 AM
Last Updated : 12 Apr 2020 10:20 AM

பாதிப்பு குறையவில்லை : கடந்த 24 மணிநேரத்தில் 909 பேருக்கு கரோனா பாஸிட்டிவ்; மேலும் 34 பேர் உயிரிழப்பு

கோப்புப்படம்: பிடிஐ

புதுடெல்லி

இந்தியாவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசகளும் பல்ேவறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தபோதிலும் கூட நாளுக்கு நாள் உயிரிழப்பும், பாதிகப்பட்டோர் எண்ணி்க்கையும் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் நாடுமுழுவதும் 34 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர், 909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பாதிப்பு ஏற்பட்ட நாளிலிருந்து நேற்று ஒரே நாளில் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2-வதுநாளாக 900 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 273 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 356 ஆகவும் அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் 7,367 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 716 பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இன்று காலை 9மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை கரோனா வைரஸுக்கு அதிகமான உயிரிழப்பு நேர்ந்துள்ளது, அந்த மாநிலத்தில் நேற்று மட்டும் 17 பேர் உயிரிழந்தால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசத்தில் நேற்று 3 பேர் உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. மூன்றாவதாக குஜராத்தில் நேற்று 3 பேர் பலியானதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் நேற்று 6 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணி்க்கை 19ஆக அதிகரித்துள்ளது, பஞ்சாப்பில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் 10 பேரும், தெலங்கானாவில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். கர்நாடகா, ஆந்திராவில் தலா 6 பேரும், மேற்கு வங்கம்,உத்தரப்பிரதேசத்தில் தலா 5 பேரும், , ஜம்மு காஷ்மீரில் 4 பேரும், ராஜஸ்தான், ஹரியாணாவில் தலா 3 பேரும், கேரளாவில் 2 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
பிஹார், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 1,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 208 பேர் குணமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து டெல்லியில் 1,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 பேர் குணமடைந்துள்ளனர் தமிழகத்தில் 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 44 பேர் குணமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தெலங்கானாவில் 504 பேரும், கேரளாவில் 364 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் 452 பேரும், , ஆந்திராவில் 381 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 532 பேரும், கர்நாடகாவில் 214 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 432 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 207, மேற்கு வங்கத்தில் 134, பஞ்சாபில் 151, ஹரியாணாவில் 177, பிஹாரில் 63, அசாமில் 29, உத்தரகாண்ட்டில் 35, ஒடிசாவில் 50, சண்டிகரில் 19, சத்தீஸ்கரில் 18, லடாக்கில் 15 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் நிகோபர் தீவில் 11 பேர், கோவாவில் 7 பேர், இமாச்சலப்பிரதேசத்தில் 32 பேர், புதுச்சேரியில் 7 பேர், ஜார்க்கண்ட்டில் 14 பேர், மணிப்பூரில் 2 பேரும், மிசோரம், அருணாச்சலப்பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்''

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x