Published : 11 Apr 2020 01:35 PM
Last Updated : 11 Apr 2020 01:35 PM

ஊரடங்கை மீறி நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து; பாஜக கவுன்சிலர் கைது: மும்பை போலீஸ் நடவடிக்கை 

மகாராஷ்டிராவில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய கரோனா ஊரடங்கு விதிமுறையை மீறிய பனுவல் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் அஜய் பஹிரா கைது செய்யப்பட்டார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ம்- தேதி நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. விதிமுறைகளை மீறி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை போலீஸார் எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பனுவல் மாநகராட்சி கவுன்சிலராக இருக்கும் அஜய் பஹிரா தனது பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்கள் 11 பேரை அழைத்து விருந்து நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

மும்பையில் கரோனா வேகமாக பரவி வரும்நிலையில் கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறி அவர் விருந்து நிகழ்ச்சி நடத்திய தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. இதையடுத்து அஜய் பஹிராவை போலீஸார் கைது செய்தனர். அவர் மட்டுமின்றி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற நண்பர்கள் 11 பேரையும் போலீஸார் கைது செய்தனர். எனினும் பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x