Published : 07 Apr 2020 10:12 PM
Last Updated : 07 Apr 2020 10:12 PM

கரோனாவை தடுக்க எய்ம்ஸ் மருத்துவமனையில் கவச வாயில்:  டிஆர்டிஓ நடவடிக்கை

கரோனா வைரஸை தொற்று பரவாமல் தடுக்கவும், கரோனை வைரஸை உடனடியாக அழிக்கவும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் கவச வாயிலை தயாரித்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளபோதிலும் தொடர்ந்து இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து பொது இடங்களுக்கு வரும் மக்களுக்கு கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வாயலில் கரோனா கவச வாசல் வைக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் இந்த கவச வாயிலை தயாரித்துள்ளது. இந்த வாசல் வழியாக மனிதர்கள் செல்லும்போது அவர்கள் மீது கரோனா வைரஸ் கிருமி இருந்தால் அதில் இருந்து வெளியாகும் கிருமிநாசினியால் உடனடியாக கொல்லப்பட்டு விடுகிறது.

இதன் மூலம் அந்த வாயிலை கடந்து செல்பவர்களுக்கு கரோனா தொற்று தடுக்கப்படுவதுடன் அவ்வாறு தொற்று உள்ளவர்கள் வந்தாலும் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x