Published : 03 Apr 2020 06:17 PM
Last Updated : 03 Apr 2020 06:17 PM

கரோனா ஊரடங்கு; டெல்லியில் குறையும் குற்றங்கள்: புள்ளி விவரங்கள் வெளியீடு

புதுடெல்லி

கரோனா பரவுவது வேகமாக அதிகரித்து வருவதால் பெருமளவு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் குற்றங்கள் குறைந்துள்ளதாக டெல்லி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர்.

கடைகளுக்கு முன்பு உரிய வகையி்ல் மக்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. அந்த வட்டங்களில் வரிசைப்படி நின்று மக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு ஸ்தலங்களும் மூடப்பட்டுள்ளன. கரோனா பரவுவது வேகமாக அதிகரித்து வருவதால் பெருமளவு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் குற்றங்கள் குறைந்துள்ளதாக டெல்லி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பான புள்ளி விவரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி மார்ச் மாதம் 15-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை டெல்லியில் நடந்த குற்றச் செயல்களை கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிட்டுள்ளனர்.

மார்ச் 15- மார்ச் 31 வரை

ஆண்டு

2019

2020

கொள்ளை

109

53

குழந்தை கடத்தல்

1

0

மிரட்டி பணம் பறித்தல்

13

3

வழிப்பறி

294

181

கத்திக்குத்து

78

27

வழிப்பறிகொள்ளை

126

55

திருட்டு

1982

1243

வீடு புகுந்து கொள்ளை

121

66

பெண்களுக்கு எதிரான குற்றம்

144

72

ஆள்கடத்தல்

259

150

பெரிய விபத்து

48

19

சிறிய விபத்து

216

112

இவ்வாறு டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x