Published : 01 Apr 2020 01:52 PM
Last Updated : 01 Apr 2020 01:52 PM

ஆந்திராவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 43 பேர் பாதிப்பு: எண்ணிக்கை 87 ஆக அதிகரிப்பு

ஆந்திராவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 43 பேர் பாதிப்படைய மொத்த எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை புதிதாக 43 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

373 சாம்பிள்கள் சோதனையில் 43 பேருக்கு கரோனா இருப்பது தெரியவந்துள்ளது. 330 பேருக்கு இல்லை என்று முடிவில் தெரிய வந்துள்ளது.

43 புதிய தொற்றில் கடப்பாவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு கோதாவரியில் 13 பேர், சித்தூரில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடப்பாவில் 15 பேர் அதிகபட்சமாக இந்த 43 பேர்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக விலகல் மேலும் கிடுக்கிப்பிடியாக இறுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x