Published : 21 Mar 2020 07:37 PM
Last Updated : 21 Mar 2020 07:37 PM

ம.பி.யில் பதவி விலகிய 22 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள்: பாஜகவில் ஐக்கியம்

புதுடெல்லி

ம.பி.யில் பதவி விலகிய 22 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஜே.பி. நட்டாவை சந்தித்து அவரது முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்தார். இதன்தொடர்ச்சியாக, அவரது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.

இதனால் பெரும்பான்மை இல்லாத சூழலில் முதல்வர் கமல்நாத் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முன்வரவில்லை. இதையடுத்து
இந்த சூழலில், மத்திய பிரதேச சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தொடரை இன்று கூட்ட வேண்டும் என்றும், மாலை 5 மணிக்குள்ளாக அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதன்படி நேற்று ம.பி. சட்டப்பேரவைக் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக முதல்வர் கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் ஒப்படைத்தார்.

இதையடுத்து ம.பி.யில் புதிய அரசு அமைக்க பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சூழலில் பதவி விலகிய 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று ஜோதிராதித்ய சிந்தியாவு, பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து அவரது முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

இதன்பின் ஜோதிராதித்ய சிந்தியா செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘பதவியை ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 22 பேரும் இன்று ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x