Published : 06 Mar 2020 09:36 PM
Last Updated : 06 Mar 2020 09:36 PM

கரோனா வைரஸ்: விரைந்து செயல்பட காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளுக்கு சோனியா காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள அவசரகால நிலையை உணர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் 95,000க்கும் அதிகமான நபர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கரோனாவில் பலி எண்ணிக்கை 3,042 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 3,291 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 31 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. கரோன வைரஸ் பரவுவதை தடுக்க பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

‘‘உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் ஆபத்தை சரியான முறையில் எதிர்கொள்ள வேண்டும். தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் மாநிலங்களில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம். இந்த அவசரகால நிலையை உணர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x