Published : 03 Mar 2020 11:13 AM
Last Updated : 03 Mar 2020 11:13 AM

ஹாட் லீக்ஸ்: ராகுல் வேண்டாமே - காங்கிரஸில் கலகம்!

காங்கிரஸுக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று சசி தரூர் உள்ளிட்ட தலைவர்கள் வெளிப்படையாக பேசிவருகிறார்கள். இந்த நிலையில், நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் அடுத்த தலைவராக வரவேண்டும் என்று சிலர் இப்போதே அழுத்தம் கொடுக்கிறார்கள். இப்படிச் சொல்பவர்களின் சாய்ஸ் ராகுல் காந்தியாக இருப்பதால் இதற்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பும் கிளம்புகிறது. “திறமையற்ற முறையில் செயல்படும் ராகுலை மீண்டும் தலைவராக்கினால் கட்சி மேலும் தேய்ந்துவிடும். எனவே, நேரு குடும்பத்துக்கு வெளியிருந்து மூத்த முன்னோடி ஒருவரை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும்’’ என இப்போதே சிலர் முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x