Published : 13 Feb 2020 09:57 AM
Last Updated : 13 Feb 2020 09:57 AM

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற 50 % எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள்

புதுடெல்லி:

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 70-ல் 62 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. 8 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

டெல்லி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எம்எல்ஏக்களில் 43 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 37 பேர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றம் உட்பட தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 13 பேர் மீது பதிவாகி உள்ளன. இதில் ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 24 எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x