Published : 09 Feb 2020 05:29 PM
Last Updated : 09 Feb 2020 05:29 PM
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று நடைபெற்றன. தேர்தல் ஆணையம் இன்னமும் இறுதி வாக்குப்பதிவு சதவீதம் எவ்வளவு என்பதை வெளியிடாமல் இருப்பது குறித்து கேஜ்ரிவால் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிந்து எத்தனை நேரம் ஆகிவிட்டது ஏன் இன்னும் கடைசி வாக்குப்பதிவு சதவீதத்தை ஏன் வெளியிடவில்லை என்பது ‘முற்றிலும் அதிர்ச்சி’யாக உள்ளது என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “முற்றிலும் அதிர்ச்சியாக உள்ளது? தேர்தல் கமிஷன் என்ன செய்து கொண்டிருக்கிறது? தேர்தல் முடிந்து பல மணி நேரங்கள் ஆகியும் இன்னும் ஏன் இறுதி வாக்குப்பதிவு விவரத்தை வெளியிடவில்லை?” என்று அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் கடைசியாகக் கூறியதன் படி டெல்லியில் 61.46% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் கூறும்போது, எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன் என்ற இறுதி நிலவரத்தை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடத் தயாராக இல்லை என்பது நாட்டின் தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறையாக இருக்கும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT