Published : 09 Feb 2020 11:11 AM
Last Updated : 09 Feb 2020 11:11 AM

குண்டு துளைக்காத ஹெல்மெட்: இந்திய ராணுவ மேஜர் அனூப் மிஸ்ரா சாதனை

லக்னோ: இந்திய ராணுவத்தில் மேஜராக பணிபுரிபவர் அனூப் மிஸ்ரா. பொறியியல் பட்டதாரியான இவர், லக்னோவில் உள்ள ராணுவக் கல்லூரியிலும் பகுதி நேரமாக பணியாற்றி வருகிறார். மேலும், ராணுவ வீரர்களுக்கு பயன்படக் கூடிய உபகரணங்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளிலும் அவர் தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.

அந்த வகையில், 'ஸ்னைப்பர்' ரக துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்க முடியாத கவச உடையை கடந்த ஆண்டு அனூப் மிஸ்ரா தயாரித்தார். ஒரு முறை தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில், 'ஸ்னைப்பர்' ரக துப்பாக்கிக் குண்டு அவரது கவச உடையை துளைத்துச் சென்றதில் அவர் படுகாயமடைந்தார். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு அந்தக் கவச உடையை அனூப் மிஸ்ரா தயாரித்தார்.

இந்நிலையில், ஏ.கே. 47 ரக துப்பாக்கி குண்டுகளால் துளைக்க முடியாத ஹெல்மெட்டினை மிஸ்ரா அண்மையில் தயாரித்திருக்கிறார். இது, உலக அளவில் முதல் குண்டு துளைக்காத ஹெல்மெட் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த வகை ஹெல்மெட்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x