Published : 02 Feb 2020 07:16 AM
Last Updated : 02 Feb 2020 07:16 AM
ஜல் ஜீவன் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.11,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறும்போது, “நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்க ஜல் ஜீவன் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக ரூ.3.6 லட்சம் கோடி செலவிடப்படும். இதில் அடுத்த நிதியாண்டில் ரூ.11,500 கோடி ஒதுக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் உள்ளூர் நீர் ஆதாரங்கள் அதிகரிக்கவும் ஏற்கெனவே உள்ள நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் மழை நீர் சேகரிப்பு மற்றும்கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் ஊக்குவிக்கப்படும். 10 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இந்த திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT