Published : 01 Feb 2020 09:07 PM
Last Updated : 01 Feb 2020 09:07 PM

உட்கிரகிக்க முடியாத அளவுக்கு மிகவும் நீளமான பட்ஜெட்: மன்மோகன் சிங் கருத்து

2020-21 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இரண்டு மணி நேரம், 40 நிமிடங்களுக்கும் அதிகமான நேரம் இவர் தனது பட்ஜெட் உரையை நிகழ்த்தினார்.

இந்த பட்ஜெட் குறித்து பலரும் விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்ற நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:-

‘மிக நீண்ட பட்ஜெட். என்னால் உட்கிரகிக்க முடியவில்லை’ என்று மட்டுமே பட்ஜெட் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு ரத்னச்சுருக்கமாக முடித்துக் கொண்டார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

காங்கிரஸ் தலைவர் அகமெட் படேல் கூறும்போது, “இதுவரை இல்லாத மிக நீண்ட பட்ஜெட் உரை, இதுவரை இல்லாத அளவில் வளவளவென மந்தமான பட்ஜெட். அச்சே தின், புதிய இந்தியாவுக்குப் பிறகு தற்போது 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தையும் மத்திய அரசு கைவிட்டது போலும்.

ஏற்கெனவே ப.சிதம்பரம், மத்திய பட்ஜெட்டுக்கு உங்கள் மார்க் என்ன என்று கேட்டபோது, 10 என்ற இலக்கத்தில் 1-ம் உள்ளது 0-ம் உள்ளது, எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று கிண்டலடித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x