Published : 16 Jan 2020 09:21 PM
Last Updated : 16 Jan 2020 09:21 PM

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு பாக்.பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கும் மத்திய அரசு

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் உறுதி செய்கையில், “இந்த ஆண்டு இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இது நாடுகளின் பிரதமர்கள் சந்திக்கும் மாநாடாகும், இதில் பன்முக வர்த்தக ஒத்துழைப்பு விவாதிக்கப்படும். ஷாங்காய் ஒத்துழைப்பு ஏற்பாட்டின் நடைமுறைகளின் படி 8 உறுப்பு நாடுகள் மற்றும் 4 நோக்கு நாடுகள் மற்றும் பிற பன்னாட்டு உரையாடல் கூட்டாளிகள் மாநாட்டு வரவேற்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளது.

இந்தியா, கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவை 8 உறுப்பு நாடுகள். ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகியவை நோக்கு நாடுகள்.

இந்நிலையில் இந்த மாநாட்டுக்காக இம்ரான் கான் வரவேற்கப்படுவார் என்று தெரிகிறது, அவர் அழைப்பிதழை ஏற்றுக் கொண்டால் 2014-ல் மோடி பதவியேற்புக்கு நவாஸ் ஷெரீப் வந்த பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் வருகை முக்கியத்துவம் பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x