Published : 16 Jan 2020 09:07 PM
Last Updated : 16 Jan 2020 09:07 PM
பாஜக-வின் புதிய பெயர் மாற்று வைபவம் நடைபெற்று வருகிறது, கொல்கத்தாவின் பழம்பெரும் துறைமுகத்துக்கு பிரதமர் மோடி சமீபத்தில் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜி பெயரைச் சூட்டினார்.
மோடியின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ள பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி, இதே போன்று விக்டோரியா மெமோரியலின் பெயரையும் மாற்றி ராணி லட்சுமி பாய் மஹால் என வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், “மோடியின் அறிவிப்பை வரவேற்கிறேன். நமக்கு தெரிந்த வரலாற்றை மறுஆய்வு செய்ய வேண்டும். விக்டோரியா மெமோரியல் என்பதை ராணி ஜான்சி ஸ்மார்க் மஹால் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். 1857 ல் ஜான்சி ராணிக்கு துரோகம் செய்து தான் ராணி விக்டோரியா, இந்தியாவை கைப்பற்றினார். 90 ஆண்டுகள் இந்தியா கொள்ளையடிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT