Published : 12 Jan 2020 06:55 AM
Last Updated : 12 Jan 2020 06:55 AM

300 தீவிரவாதிகள் ஊடுருவ காத்திருப்பு- மத்திய உள்துறை எச்சரிக்கை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழி யாக 300 தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீருக் குள் ஊடுருவக் காத்திருப்பதாக மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா நடை பெறவுள்ளது. அப்போது நாடு முழுவதும் சதித் திட்டங்களைச் செயல்படுத்த 300 தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீரில் நுழைவதற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் காத்திருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் வந்துள்ளது.

இவர்கள் அனைவரும் ஆப்கானிஸ் தான் போராளிகள் என்பது தெரியவந்துள் ளது. இதையொட்டி ஜம்மு-காஷ்மீர் பகுதியிலுள்ள ராணுவத்தினர் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. துணை யோடு இந்த தீவிரவாதிகள் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர்களுக்கு ஆப்கன் தலிபன்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தீவிரவாதிகள் முக்கிய நகரங் களில் தாக்குதல் நடத்த குறிவைத்திருப் பதாக தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்ட இந்திய ராணுவ உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். பனிக்காலம் என்பதால் பதுங்கியுள்ள தீவிர வாதிகள் பனி உருகத் தொடங்கும் போது இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக் கலாம் என்றும் ராணுவத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராணுவ மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “காஷ்மீரில் அமைதி யைக் குலைப்பதற்காக ஆப்கன் தீவிர வாதிகள் சதி வேலையில் ஈடுபடுகின்ற னர். காஷ்மீருக்கு இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலே ஆப்கன் தீவிரவாதிகள் தான். ஜம்மு-காஷ்மீரில் நமது ராணுவத் தினர் எச்சரிக்கையுடன் இருப்பதால், பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ஈரான், அமெரிக்கா இடையே ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடைபெற்றது. அதைப்போல் இங்கும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என ராணுவத்தினரை எச்சரித்துள்ளோம்.

மேற்கு மண்டல எல்லையையொட்டி எல்லையோர பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

இதனிடையே பாகிஸ்தான், வங்கதேச எல்லையையொட்டி இரும்பு வேலி அமைக்கும் பணியில் ராணுவம் ஈடுபட் டுள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரி வித்தனர். தற்போது பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸையொட்டி உள்ள 60 கி.மீ. எல்லைப் பகுதியில் இரும்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x