Last Updated : 05 Jan, 2020 05:09 PM

 

Published : 05 Jan 2020 05:09 PM
Last Updated : 05 Jan 2020 05:09 PM

பாகிஸ்தான் இந்துக் குடும்பத்தின் குழந்தைக்கு குடியுரிமை என பெயரிட்ட மத்திய அமைச்சர்

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் பாகிஸ்தான் இந்து அகதி பெண்ணின் கைக்குழந்தைக்கு 'நாகரிகட்டா' என்று பெயரிட்டுள்ளார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதனை அடுத்து பாஜகவும் பல்வேறு மாநிலங்களில் சிஏஏ ஆதரவு பேரணிகளை நடத்தி வருகின்றன. அதை அடுத்து இன்றுமுதல் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த மிகப் பெரிய பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாஜக தொடங்கியுள்ளது.

ஒரே நாளில், கட்சியின் மூத்தத் தலைவர்கள் 42 பேர் 42 இடங்களில் வீடு வீடாக சிஏஏ பிரச்சாரங்களைத் தொடங்குகின்றனர்.

பாகிஸ்தானில் ஏழு ஆண்டுகளாக வசித்துவரும் இந்துக் குடும்பத்திற்கு இன்றுவரை குடியுரிமை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளனர். அவர்கள் சிஏஏவை அமல்படுத்தியதில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சிஏஏவை ஆதரித்து பாஜகவினர் டெல்லியில் இன்று நடத்திய பேரணியில் கலந்துகொண்டனர். இவர்களின் குழந்தைக்கு ''நாகரிகத்தா'' (குடியுரிமை) என பெயர் வைத்தார் மத்திய அமைச்சர் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

பாகிஸ்தானில் மறுக்கப்பட்ட இந்து குடும்ப குழந்தைக்கு குடியுரிமை எனப் பெயரிட்ட பிறகு, கார்ப்பரேஷன் அதிகாரிகள் சிறுமியின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தனர். அதைத் தொடர்ந்து குடும்பம் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த குழந்தையின் தாய் ஆர்த்தி கூறுகையில், எங்கள் மகள் எங்கள்வீட்டின் லட்சுமி. அக்குழந்தையின் பிறப்பால் நமது குடியுரிமையின் பாதை திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிஏஏ அமல்படுத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.

இதன் பின்னர், ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியும் பெண் குழந்தையைப் பற்றி குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x