Published : 30 Dec 2019 07:59 PM
Last Updated : 30 Dec 2019 07:59 PM

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்: சிஏஏவுக்கு எதிராக மம்தா பேரணி

புருலியா பேரணியில் மம்தா பானர்ஜி. | பிடிஐ.

கொல்கத்தா

குடியுரிமைத் திருத்தச் சட்டம் திரும்பப் பெறும் வரையில் தன் போராட்டம் ஓயாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

புருலியாவில் நடந்த பேரணியின் போது மம்தா கூறியதாவது:

சட்டப்பூர்வ குடிமக்களின் குடியுரிமையை பாஜக பறிக்கப் பார்க்கிறது. பாஜகவுக்கு எதிராக அனைவரும் அணி திரளுங்கள். எல்லா இடங்களிலும் பாஜகவைத் தனிமைப் படுத்துங்கள்.

காவிக்கட்சியினர் அமைதியாகப் போராடுபவர்களையும் தேச விரோதிகள் என்று முத்திரைக் குத்துகிறது. உங்கள் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள் மற்றதை என்னிடம் விட்டு விடுங்கள். யாரும் இந்த நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள், என்று பேசினார் மம்தா.

சிஏஏ மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x