Published : 24 Dec 2019 02:09 PM
Last Updated : 24 Dec 2019 02:09 PM
தேசத்தை ஜனநாயகத்தால் மட்டுமே ஆள முடியும் துப்பாக்கி குண்டுகளால் ஆள முடியாது என்பதை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் மூலம் நிரூபித்துள்ளார்கள் என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் காங்கிரஸ்-ஆர்ஜேடி-ஜெஎம்எம் (ஜார்க்கண்ட் முக்தி மோர்சா) கூட்டணி 47 இடங்களைக் கைப்பற்றி மெகா வெற்றி படைத்தது. 81 இடங்களில் பாஜக வெறும் 25 இடங்களை மட்டுமே பிடித்து ஆட்சியை நழுவவிட்டது.
இது குறித்து காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக், "ஜார்க்கண்டில் முதல்வராக இருந்தவரும், சபாநாயகருமேகூட தோற்றுப் போனார்கள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அகந்தை தவிடுபொடியாக்கப்பட்டது.
நாடு இனியும் அவர்களின் தான் என்ற அகந்தையை ஏற்றுக் கொள்ளாது. மக்களின் தீர்ப்பு இத்தேசம் ஜனநாயக்த்தால் நடத்தப்படும் துப்பாக்கி குண்டுகளால் அல்ல என்பதை நிரூபித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் இல்லாத பாரதம் என்று அமித் ஷா சொன்னார், இப்போது பாஜக அல்லாது பாரதத்தைப் பார்ப்பார்கள்.
ஜார்க்கண்ட் தேர்தலில் ஜெஎம்எம் 30 சீட்களையும், காங்கிரஸ் 16, ஆர்ஜேடி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றன. ஜெஎம்எம் கட்சியின் ஹேமந்த் சோரன் முதல்வராகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT