Published : 12 Dec 2019 01:00 PM
Last Updated : 12 Dec 2019 01:00 PM

தேர்தல் செலவை எதிர்கொள்ள தேநீர் விருந்து மூலம் நிதி: கட்சியினருக்கு அர்விந்த் கேஜ்ரிவால் அறிவுறுத்தல்

வரவிருக்கும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அட்சியின் மூத்த தலைவர்கள் தேநீர் விருந்து, மதிய உணவு அல்லது இரவு உணவு விருந்து நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டுமாறு ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லியில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மக்களை நேரடியாக சந்தித்துப் பேசும் வகையில் ஆம் ஆத்மி கட்சி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறது. மக்கள் தொடர்பு பிரச்சாரம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பிரச்சாரம் கடந்த மாதம் தொடங்கியது. டிசம்பர் 24-ம் தேதிவரை நடைபெறுகிறது.

அதன் பின்னர் டிசம்பர் இறுதியிலிருந்து ஆம் ஆத்மி கட்சியினர் பொது மக்களுக்காக விருந்து நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களிடமிருந்து தேர்தல் நிதி திரட்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை டெல்லி வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை கேஜ்ரிவால் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சஞ்சய் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x