Published : 24 Nov 2019 08:18 AM
Last Updated : 24 Nov 2019 08:18 AM

அரசியல் சட்ட நடைமுறையில் ஆளுநர்களுக்கு முக்கிய பங்கு: குடியரசுத் தலைவர் ராம்நாத் வலியுறுத்தல்

புதுடெல்லி

நாட்டின் அரசியலமைப்புச் சட்ட நடைமுறையில் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் 50-வது மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்துப் பேசியதாவது:நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி மற்றும் ஆரோக்கியமான போட்டி கொண்ட கூட்டாட்சியை நாம் வலியுறுத்தி வருகிறோம். இத்தகைய கூட்டாட்சியில் ஆளுநரின் பங்கு மிக முக்கியமானது. நாட்டின் அரசியலமைப்பு சட்ட நடைமுறையில் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது.

நாட்டின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது மக்கள் வளர்ச்சியில் சற்று பின்தங்கியுள்ளனர். மக்களின் முன்னேற்றத்துக்காக ஆளுநர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட அரசியல் சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி மாநில அரசுகளுக்கு உரிய வழிகாட்டுதலை அளிக்க முடியும். பழங்குடியினர் முன்னேற்றமும் அதிகாரமும் பெறச் செய்வதுஅவசியமாகும். இது அனைவரையும் உள்ளிட்டக்கிய வளர்ச்சியுடன் தொடர்புடையது மட்டுமல்ல. உள்நாட்டுப் பாதுகாப்புடனும் தொடர்புடையது ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x