Published : 13 Nov 2019 09:19 PM
Last Updated : 13 Nov 2019 09:19 PM
டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் இரண்டு நாட்களுக்கு பள்ளிகளை மூட டெல்லி மாநில அரசுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் காய்ந்த பயிர் தட்டைகள், சுள்ளிகள் வைக்கப்போர் உள்ளிட்டவற்றை டன்கள் கணக்கில் எரித்ததால் டெல்லியில் காற்று மாசின் அளவு எகிறியது. இதற்குப் பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் டெல்லி என்.சி.ஆர் பகுதியில் மேலும் இரண்டு நாட்களுக்கு பள்ளிகளை மூட சுற்றுச்சூழல் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. மேலும் நிலக்கரி மற்றும் இதர எரிபொருட்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளும் வரும் நவ.15 வரை மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்திலும் காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT