Published : 11 Nov 2019 12:30 PM
Last Updated : 11 Nov 2019 12:30 PM

முஸ்லிம் இளைஞர் தந்த நிலம்; உ.பி.யில் கோசாலை திறப்பு

முசாபர்நகர்

இந்தியாவில் வேறெந்த மாநிலங்களை விடவும் கோசாலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் மாநிலம் உத்தரப் பிரதேசம். இங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றதிலிருந்து தெருக்களில் திரியும் பசுக்கள் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில் 750 கோசாலைகளைத் திறக்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இது தவிர பொதுமக்களும் சுற்றித் திரியும் பசுக்களுக்கு ஆதரவளிக்கும் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவ்வகையில் முசாபர்நகர் மாவட்டத்தில் புர்காசி நகருக்கு அருகிலுள்ள கெய்கேரி சாலையில் உள்ள இரண்டு பிக்ஹாக்களின் நிலத்தில் கோசாலைகளுக்கான கொட்டகைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு ஷர்பத் அலி எனும் முஸ்லிம் இளைஞர் பரிசாக அளித்ததாக நிர்வாகக் குழுவின் செயலாளர் தெரிவித்தார். இது தவிர அவரது நிலத்திலேயே மீதமிருந்த பகுதியில் முதியோர் இல்லம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கோசாலை மற்றும் முதியோர் இல்லக் கட்டிடங்களை ஹனுமத் தாம் மஹந்த் சுவாமி கேஷ்வானந்த் மகாராஜ் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x