Published : 29 Oct 2019 07:31 PM
Last Updated : 29 Oct 2019 07:31 PM

ஆந்திராவில் புதிய சட்டத்தினால் கட்டுமானத் தொழிலில் ஏற்பட்ட சரிவு: தொழிலாளி தற்கொலையால் அரசு மீது கடும் விமர்சனம்

குண்டூர், பிடிஐ

ஆந்திர மாநிலம் குண்டூரில் வேலையின்மை காரணமாக குடும்பக் கஷ்ட்த்தைத் தாங்க முடியாமல் பிளம்பர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய அரசியலாகி வருகிறது. இவர் வேதனையுடன் தற்கொலைக்கு முன்னால் பேசி வெளியிட்ட வீடியோவை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தன் வலைப்பக்கத்தில் பகிர பிரச்சினை பூதாகாரமாகியுள்ளது.

பி.வெங்கடேஸ்வரலு என்ற இந்தக் கட்டுமானத் தொழிலாளி சுத்தமாக வேலை இல்லாததால் தன்னால் குடும்பத்தை நடத்த முடியவில்லை என்று வீடியோவில் பேசி தான் தற்கொலை செய்து கொள்வதாக வெளியிட்டார்.

சந்திரபாபு நாயுடு கொண்டு வந்த இலவச மணல் என்ற திட்டத்தை புதிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு ரத்து செய்ததையடுத்து கட்டுமானப்பணிகள் பெரிய அளவில் அடிவாங்கியுள்ளன.

இதனையடுத்து வெங்கடேஸ்வரலு வெளியிட்ட வீடியோவில், “கடந்த சில மாதங்களாக வேலை ஒன்றும் வரவில்லை, பிழைக்க வழியில்லை. என்னால் குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை ஆகவே தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார். மேலும் தன் அண்ணனும் அண்ணியும் தன் குழன்தையைக் காப்பாற்றுவார்கள் என்றும், தன் மனைவி இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் உருக்கமாக தெரிவித்தார்.

இதனையடுத்து சந்திரபாபு நாயுடு கூறும்போது, “தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது இதயத்தைக் கலக்குகிறது. கடந்த 5 மாதங்களாக பணிகள் எதுவும் இல்லை, அவர்கள் குடும்பம் வறுமையில் வாடுவதை பார்க்க முடியவில்லை” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

மணல் தட்டுப்பாட்டினால் கட்டுமானப்பணிகள் முடங்கியுள்ளன. இந்தத் துறையில் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை பறிபோயுள்ளது என்று தெலுங்கு தேசம் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x