Published : 23 Oct 2019 10:56 AM
Last Updated : 23 Oct 2019 10:56 AM
குவாஹாட்டி
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசுப்பணி இல்லை என அசாம் மாநில அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அண்மையில், நடைபெற்ற அசாம் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், "2021 ஜனவரி 1-ம் தேதிக்குப் பின்னர் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசுப்பணி வழங்கப்பட மாட்டாது என்று அசாம் அமைச்சரவை முடிவு செய்ததுள்ளது,
அதேபோல் தற்போது பணியில் உள்ள அரசு அதிகாரிகளும் இந்த இரண்டு குழந்தைகள் முறையைக் கடைபிடிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டே அசாம் அரசு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த முடிவு செய்தது. அந்த வகையில் சிறிய குடும்பங்களை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் அளித்துவந்தது. அந்த வரிசையில் தற்போது 2021 ஜனவரி 1-ம் தேதிக்குப் பின்னர் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசுப்பணி வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.
இருப்பினும், மாநில அரசின் இந்த முடிவு விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் நிலத்தின் மீதான நெருக்கடியை சமாளிக்கவே இந்த முடிவை எடுத்திருப்பதாக அரசு தரப்பில் விளக்கப்பட்டிருக்கிறது.
நிலமற்ற பழங்குடி மக்களுக்கு வேளாண்மை செய்யவும் வீடு கட்டவும் நிலம் ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT