Last Updated : 11 Jul, 2015 10:03 AM

 

Published : 11 Jul 2015 10:03 AM
Last Updated : 11 Jul 2015 10:03 AM

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவுடன் மோதல்: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் அம்பரீஷ்?

கர்நாடக முதல்வர் சித்தராமையா வுடன் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து வீட்டு வசதித் துறை அமைச்சர் அம்பரீஷ் ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் சித்தராமையாவுக் கும், வீட்டு வசதித்துறை அமைச்சர் அம்பரீஷ்க்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் பனிப்போர் நடைபெற்று வந்தது. இதனால் தனது துறைக்கும், மாண்டியா மாவட்டத்துக்கும் போதிய நிதி ஒதுக்கவில்லை என அம்பரீஷ் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.

பெலகாவியில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலை யில் அம்பரீஷ் முதல்வர் சித்த ராமையாவுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “கர்நாடக அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை மற்றும் மாண்டியா மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த போதும், எனக்கு கர்நாடக அரசிடம் இருந்து எவ்வித ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை.

உங்களுடன் (சித்தராமையா) இணைந்து செயல்பட முயற்சித் தாலும், என்னை தொடர்ந்து புறக் கணித்து வருவது ஏன்?'' என அம்பரீஷ் வெளிப்படை யாக கேள்வி எழுப்பிய விவகாரம் அம்மாநில‌ அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள‌து.

இதனிடையே அம்பரீஷ் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளி யானது. இதையடுத்து மூத்த அமைச்சர்களும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களும் அவரை சமரசம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இருப்பினும் அம்பரீஷ், சட்டப் பேரவை கூட்டத்தொடரை புறக் கணித்துவிட்டு பெங்களூரு திரும்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சித்தராமையா அம்பரீஷூடன் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது, அம்பரீஷ் முன் வைத்த அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதாகவும், அமைச்சரவையில் இருந்து அவரை விடுவிக்க முடியாது எனவும் கூறியதாகத் தெரிகிறது.

சித்தராமையாவுக்கு நெருக்க மான அமைச்சர்களான மகாதேவ பிரசாத், ஹெச்.சி.மகாதேவப்பா ஆகிய இருவரும் அம்பரீஷை நேற்று சந்தித்து சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x