Published : 03 Oct 2019 11:05 AM
Last Updated : 03 Oct 2019 11:05 AM
பாட்னா
பிஹார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் வெள்ள சேதப்பகுதிகளை பார்வையிடச் சென்ற பாஜக எம்.பி. ராம் கிர்பால் யாதவ் படகில் சென்றபோது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததால் தண்ணீரில் மூழ்கினார். அவரை பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்தவர்கள் மீட்டனர்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மகாராஷ்டிர, பிஹார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பிஹார், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக பிஹார் தலைநகர் பாட்னாவில் தொடர்ந்து 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் தெருக்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மாநிலத்தின் பல பகுதிகளிலும் விடாமல் மழை பெய்து வருவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலன இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்நதுள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வீடுகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் வீட்டுக்குள்ளும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அவர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தார். உடனடியாக அவரையும், அவரது குடும்பத்தினரையும் பேரிடர் மீட்பு குழுவினர் படகு மூலம் மீட்டனர்.
#WATCH Bihar: BJP MP Ram Kripal Yadav falls into the water after the makeshift boat he was in, capsized in Masaurhi, Patna district, during his visit to the flood affected areas yesterday. He was later rescued by the locals. (02.10.2019) pic.twitter.com/iwI4OdNGiH
— ANI (@ANI) October 3, 2019
இந்தநிலையில் பாட்னா மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பாஜக எம்.பி. ராம் கிர்பால் யாதவ், படகில் சென்று பார்வையிட்டார். மசாவுர்கி என்ற பகுதியில் படகில் சென்ற அவர் வெள்ளம் பாதித்த இடங்களை ஆய்வு செய்தார்.
அவருடன் அதிகாரிகளும் சென்றனர். திடீரென படகு கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்த ராம் கிர்பால் யாதவ் உள்ளிட்ட பலரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அடுத்தடுத்த படகுகளில் வந்த பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக அவர்களை மீட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT