Last Updated : 14 Jul, 2015 10:55 AM

 

Published : 14 Jul 2015 10:55 AM
Last Updated : 14 Jul 2015 10:55 AM

கோதாவரி புஷ்கரம் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கோதாவரி புஷ்கரம் எனப்படும் புனித நீராடல் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர்.

ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக இரு மாநில அரசுகளும் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளன.

இந்நிலையில், ராஜமுந்திரியில் 'கோதாவரி புஷ்கரம்' விழாவின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர், 2 பேர் காயமடைந்தனர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x