Published : 17 Sep 2019 02:52 PM
Last Updated : 17 Sep 2019 02:52 PM
புதுடெல்லி
பொருளாதார மந்தநிலையை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொருளாதார மந்தநிலைக்கு பொறுப்பேற்காமல் மத்திய அரசு திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடலாம்.
ஆனால், மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். பொருளாதார தேக்கநிலை இன்னுமொரு ஆட்டோமொபைல் நிறுவனத்தை தாக்கியுள்ளது. இதோ இன்னும் அதிகமானோர் வேலையிழக்கப் போகின்றனர்" எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த 13-ம் தேதி பிரியங்கா காந்தி பதிவு செய்த ட்வீட் பரவலாகப் பேசப்பட்டது. அன்றைய தினம் அவர், ஒழுங்காக கேட்ச் பிடிக்க வேண்டுமென்றால் பந்து விழும் கடைசி நிமிடம்வரை அதனை கண்காணிக்க வேண்டும்.
அதேவேளையில் விளையாட்டு வீரருக்கான உத்வேகத்தை கைவிடக் கூடாது. இல்லாவிட்டால் புவி இர்ப்பு விசை, ஓலா, உபேர், என தேவையற்ற சாக்குகளை சொல்ல வேண்டியிருக்கும். இந்திய பொருளாதாரத்தின் நலன் கருதி வெளியிடப்படுகிறது என ட்வீட் செய்திருந்தார்.
தொடர்ந்து பொருளாதார மந்தநிலை குறித்து பேசியும், ட்வீட் செய்தும் வருகிறார்.
-ஏஎன்ஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT